search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆலங்குடி அருகே மது விற்றவர் கைது

    ஆலங்குடி அருகே தைல மரக்காட்டில் அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழகரும்பிரான்கோட்டையை சேர்ந்த கணேசன் மகன் சந்திரமோகன் (வயது 35). சம்பவத்தன்று இவர் ஆலங்குடி அருகே உள்ள ஆண்டிகுளம் தைல மரக்காட்டில் அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து திருட்டுத் தனமாக விற்று வந்தார். 

    தகவலறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சந்திரமோகனை கைது செய்தனர். 

    மேலும் சந்திரமோகன் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    Next Story
    ×