search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி பற்றி எரிவதை படத்தில் காணலாம்.
    X
    லாரி பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

    பெருந்துறை அருகே நள்ளிரவில் ஓடும் லாரி தீ பிடித்து எரிந்தது

    பெருந்துறையை அடுத்துள்ள கிரேநகர் அருகே பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    தெலுங்கானா, ஐதராபாத் பகுதியில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிய லாரி ஒன்று கோவையை நோக்கிசென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி, மங்கலம் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரது மகன் கஸ்தூரி ராஜன்(45) என்ற டிரைவர் ஒட்டி வந்தார்.

    அவர் பெருந்துறையில் இருந்து கிரேநகர் வழியாக சென்று கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவு ஒருமணியளவில் லாரியின் பின்பகுதியில் இருந்து புகையுடன் பற்றி எரிவதை கண்ணாடி வழியாக பார்த்த டிரைவர் கீழே இறங்கி பார்த்த போது லாரியில் இருந்த பஞ்சுலோடு கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து பெருந்துறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    ஆனால் லாரியின் இருந்து பஞ்சு லோடு முற்றிலும் எரிந்து போனது. லாரியில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தெரிகிறது.

    Next Story
    ×