என் மலர்
செய்திகள்

மின் இணைப்பு துண்டிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 60 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
கடந்த ஆண்டில் 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று தொடர்ந்து விதிமுறைகள் மீறி செயல்படும் ஆலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சித்தோடு, பவானி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் ஒரு சில ஆலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் காவிரி பவானி உள்ளிட்ட ஆறுகள் மாசடைந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
விதிமுறை மீறி கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதல்கட்டமாக ஆலைகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் ஈரோட்டில் சுமார் 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது இதுதவிர வருவாய்த்துறை மூலம் சுமார் ரூ. 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு , பவானி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இவற்றுள் சில ஆலைகள் இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் கலந்து விடுகின்றனர்.
இதனால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்து விதிமுறைகளை மீறும் ஆலைகளுக்கு அபராதம் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இதுவரை 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று தொடர்ந்து விதிமுறைகள் மீறி செயல்படும் ஆலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சித்தோடு, பவானி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் ஒரு சில ஆலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் காவிரி பவானி உள்ளிட்ட ஆறுகள் மாசடைந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
விதிமுறை மீறி கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதல்கட்டமாக ஆலைகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் ஈரோட்டில் சுமார் 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது இதுதவிர வருவாய்த்துறை மூலம் சுமார் ரூ. 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு , பவானி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இவற்றுள் சில ஆலைகள் இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் கலந்து விடுகின்றனர்.
இதனால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்து விதிமுறைகளை மீறும் ஆலைகளுக்கு அபராதம் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இதுவரை 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று தொடர்ந்து விதிமுறைகள் மீறி செயல்படும் ஆலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






