என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்குப்பெட்டியை தூக்கி சென்று குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
Byமாலை மலர்30 Dec 2019 9:49 AM GMT (Updated: 30 Dec 2019 9:49 AM GMT)
விராலிமலை அருகே வாக்குப்பெட்டியை தூக்கு சென்று குண்டர் சட்டத்தில் கைதான வாலிபரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் வெம்மணி ஊராட்சிக்குட்பட்ட பெரிய முள்ளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந்தேதி நடைபெற்றது.
ஒட்டுப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளை வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் சீல் வைத்து வாக்குச்சாவடி மையத்தின் அறையையும் பூட்டிவிட்டு அமர்ந்திருந்தனர்.
அப்போது வாக்குச்சாவடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடினார். தடுக்க முயன்ற போலீஸ்காரர் சையது முகமது புகாரியை, மூர்த்தி தள்ளி விட்டு சென்றார்.
அந்த வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் அன்பழகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த மண்டையூர் போலீசார் காட்டுப்பகுதிக்குள் கிடந்த வாக்கு பெட்டியை மீட்டனர். பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய மூர்த்தியையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட வாக்குப்பெட்டியில் சீல் உடைக்கபடாமல் இருந்தது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுக்கோட்டை எஸ்.பி. அருண்சக்திகுமார் வாக்குப்பெட்டி திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கருப்பையாதான் பெட்டியை தூக்கச் சொன்னதும் சரவணன், அய்யப்பன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாக்குப்பெட்டியை திருடிக்கொண்டு ஓடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூர்த்தி உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மண்டையூர் போலீசார் அதில் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வாக்குபெட்டியை திருடிச் சென்ற மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் வெம்மணி ஊராட்சிக்குட்பட்ட பெரிய முள்ளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந்தேதி நடைபெற்றது.
ஒட்டுப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளை வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் சீல் வைத்து வாக்குச்சாவடி மையத்தின் அறையையும் பூட்டிவிட்டு அமர்ந்திருந்தனர்.
அப்போது வாக்குச்சாவடி மையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடினார். தடுக்க முயன்ற போலீஸ்காரர் சையது முகமது புகாரியை, மூர்த்தி தள்ளி விட்டு சென்றார்.
அந்த வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் அன்பழகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த மண்டையூர் போலீசார் காட்டுப்பகுதிக்குள் கிடந்த வாக்கு பெட்டியை மீட்டனர். பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய மூர்த்தியையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட வாக்குப்பெட்டியில் சீல் உடைக்கபடாமல் இருந்தது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுக்கோட்டை எஸ்.பி. அருண்சக்திகுமார் வாக்குப்பெட்டி திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கருப்பையாதான் பெட்டியை தூக்கச் சொன்னதும் சரவணன், அய்யப்பன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாக்குப்பெட்டியை திருடிக்கொண்டு ஓடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூர்த்தி உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மண்டையூர் போலீசார் அதில் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வாக்குபெட்டியை திருடிச் சென்ற மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X