என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் பன்றிகளை திருட முயன்ற 3 பேர் கைது - சரக்கு வேன் பறிமுதல்
Byமாலை மலர்23 Dec 2019 4:07 PM GMT (Updated: 23 Dec 2019 4:07 PM GMT)
ஜெயங்கொண்டத்தில் பன்றிகளை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமனால் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 35). இவர் பன்றிகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது பன்றிகள் அடிக்கடி திருடுபோனது. இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு சரக்கு வேனில் 3 பேர் சேர்ந்து பன்றிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
இதனை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் பன்றிகளை திருடி செல்ல முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருவாரூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா(35), கும்பகோணத்தை சேர்ந்த நாகேஷ் மகன் தர்மா(25), கும்பகோணத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிகண்டன்(21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமனால் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 35). இவர் பன்றிகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது பன்றிகள் அடிக்கடி திருடுபோனது. இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு சரக்கு வேனில் 3 பேர் சேர்ந்து பன்றிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
இதனை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் பன்றிகளை திருடி செல்ல முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருவாரூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா(35), கும்பகோணத்தை சேர்ந்த நாகேஷ் மகன் தர்மா(25), கும்பகோணத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் மணிகண்டன்(21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X