என் மலர்
செய்திகள்

3 மாதமாக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்குஉட்பட்டது தாளவாடி வனச்சரத்தில் அமைந்துள்ளது தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் இப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.
கடந்த 3 மாதம் முன்பு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்கு உள்ள. 4ஆடுகள் மற்றும் 15 நாய்களை வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பீம்ராஜ்நகர் பகுதிதை சேர்ந்த விவசாயி மணி என்பவர் ஆட்டை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது.சிறுத்தை கடித்ததில் ஆடுபலியானது வனத்துறையினரும் கால்தடங்களை வைத்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து 2 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
அதில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது அதை தொடர்ந்து கல்குவாரி அருகே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டுவைத்தனர் கூண்டில் ஒரு புறம் ஆட்டை கட்டி வைத்துள்ளனர் வனத்துறையினர் சிக்குமா சிறுத்தை?.






