search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X
    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    அரியலூரில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    அரியலூரில் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூரில் வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 50). வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவராவார். இந்நிலையில் இவர் கடந்த 14-ந் தேதி நீதிமன்றத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், இந்த வழியாக செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.

    அப்போது, பிரிவு சாலையில் தடுத்து அனுப்பியிருந்தால் அப்படியே சென்றிருப்பேன். அங்கே விட்டு விட்டு இங்கு வந்து தடுத்து திருப்பி அனுப்பினால் எவ்வளவு தூரம் திரும்பி செல்வது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தற்போது கூட்டமும் இல்லை. எனவே, இந்த வழியாக நான் சென்று விடுகிறேன் என கூறியதாகவும், அதற்கு முடியாது என அந்த போலீஸ்காரர் தெரிவிக்க, அந்த இடத்துக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விடுங்கள் போகட்டும் என கூறியுள்ளார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போலீஸ்காரர் தனது காலால் உதைத்து கீழே தள்ளிவிட்டு வழிவிட்டதாக தெரிகிறது.

    இவ்வாறு நடந்து கொண்ட போலீஸ்காரரை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோர்ட்டு பணியை புறக்கணித்து வக்கீல்கள் நேற்று கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் துணைத்தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போலீசாரை கண்டித்து பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×