என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டி.என்.பாளையம் அருகே மூதாட்டி சுருண்டு விழுந்து திடீர் பலி
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள சேட்டுக்காட்டு புதூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 68). இவரது 2-வது மனைவி நாகம்மாள் (55).லட்சுமணனின் முதல் மனைவிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் பெருமாள் (50) செல்லம்மாள் ஆகியோரின் மகன் சிவராஜ் (28). இவர் அந்தியூரில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் லாரி டிரைவராக வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிவராஜ் பாட்டி வீட்டுக்கு சென்றார். குடும்ப பிரச்சினை குறித்து தனது பாட்டி நாகம்மாளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சிவராஜ் தனது பாட்டியை தாக்கினார். இதில் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாக தெரிகிறது.
அவரது உறவினர்கள் அத்தாணி அரசு மருத்துவ மனைக்கு நாகம்மாளை சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டு வந்தனர்.
இந்நிலையில் நாகம்மாள் நேற்று அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று இந்த பிரச்சினை குறித்து அண்ணனிடம் கூறி அழுதார். இதனையடுத்து நாகம்மாள் தனக்கு தலை வலி மற்றும் மயக்கம் வருவதாக கூறி கீழே சுருண்டு விழுந்து அங்கேயே அவர் இறந்து விட்டார்.
தகவல் அறிந்து பங்களா புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
நாகம்மாள் சாவுக்கு என்ன காரணம் குறித்து இன்று நடக்கும் பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்