என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 11-ம் வகுப்பு மாணவர் பலி
படப்பை:
படப்பை அடுத்த மணிமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் பிரகாஷ் (16).
இவர் படப்பையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியியை சேர்ந்த செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் பிரகாசை அழைத்து கொண்டு புஷ்ப கிரி சாலையில் படப்பை நோக்கி சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பிரகாஷ் பரிதாபமாக பலியானார்.
செல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்தார். நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்