search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆலங்குடி அருகே துப்பாக்கியுடன் வாலிபர் கைது

    ஆலங்குடி அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தெற்குமேலக் கோட்டையில் 2 பேர் நாட்டு துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் குப்பக்குடி வெற்றி ஆண்டவர் கோவில் அருகே உள்ள முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு அடுத்துள்ள கொட்டகையில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு இருந்த முருகேசனை பிடித்து விசாரித்ததில் கொட்டகையில் 2 நாட்டு துப்பாக்கிகளையும் பழுதடைந்த ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் மரத்தால் ஆனா ஒரு துப்பாக்கியையும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்ததுடன், முருகேசனை கைது செய்தனர். முருகேசனின் கூட்டாளியான கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×