என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Dec 2019 6:14 PM GMT (Updated: 3 Dec 2019 6:14 PM GMT)
கந்தர்வகோட்டை அருகே பள்ளி மாணவி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை செட்டிசத்திரம் தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு மோகனசுந்தரி(வயது 17) என்ற மகள் மற்றும் கருப்பையன்(12) என்ற மகன் உள்ளார். மோகனசுந்தரி, கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மோகனசுந்தரி வீடு திரும்பினார். பின்னர் மாரியம்மாள் வெளியே சென்றுவிட்டார்.
அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் மோகனசுந்தரி தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் சத்தம் போட்டார். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மோகனசுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மோகனசுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகனசுந்தரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கந்தர்வகோட்டை செட்டிசத்திரம் தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு மோகனசுந்தரி(வயது 17) என்ற மகள் மற்றும் கருப்பையன்(12) என்ற மகன் உள்ளார். மோகனசுந்தரி, கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மோகனசுந்தரி வீடு திரும்பினார். பின்னர் மாரியம்மாள் வெளியே சென்றுவிட்டார்.
அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் மோகனசுந்தரி தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் சத்தம் போட்டார். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மோகனசுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மோகனசுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகனசுந்தரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X