என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருந்துறை அருகே இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் லதா (வயது 23). இவருக்கும் பள்ளி பாளையம் அடுத்த அஞ்சுபனை பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நந்தகுமார் திருப்பூர் பணியன் கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் லதா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதற்கிடையே பெற்றோர் வீட்டில் இருந்த லதா திடீரென விஷம் குடித்து விட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே லதா இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணமாகி 1½ ஆண்டில் இளம்பெண் இறந்து விட்டதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்