search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    மகனை டியூசனுக்கு அழைத்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

    ஈரோட்டில் மகனை டியூசனுக்கு அழைத்து சென்ற பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு செல்வம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். சொந்தமாக ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 41). சுமதி தனது மகன் ஆதித்யாவை தனது மொபட்டில் டியூசன் கொண்டு சென்று விடுவது வழக்கம். பின்னர் டியூசன் முடிந்ததும் மகனை வீட்டுக்கு அழைத்து வருவார்.

    இதேபோன்று நேற்றும் வழக்கம் போல் டியூசன் முடிந்ததும் தனது மகனை மொபட்டில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

    கணபதி நகர் பகுதி அருகே வந்தபோது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். பின்னால் அமர்ந்து வந்த நபர் திடீரென சுமதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி திருடன்.. திருடன்..என கத்தினார். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பிச் ஓடி விட்டனர்.

    இதுகுறித்து விரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர். கொள்ளை சம்பவம் நடந்த இடம் அருகே வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×