என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடியில் கொலை வழக்கில் இளம்பெண் கைது
Byமாலை மலர்28 Nov 2019 2:00 PM GMT (Updated: 28 Nov 2019 2:00 PM GMT)
ஆலங்குடியில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே படேல் நகரில் ஒரு கார் அனாதையாக நின்றது. இது குறித்து பொதுமக்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை பார்த்த போது அதில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
விசாரணையில் இறந்து கிடப்பது ஆலங்குடி அருகே உள்ள குளவாய்பட்டியை சேர்ந்த முத்துவின் மகன் கார்த்திக் என்பது தெரியவந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த ஒரு வருடமாக கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த குமராபாண்டி என்பவரின் மனைவி சித்ரா (வயது 33) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சித்ரா, கார்த்திக்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சித்ராவை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X