என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாங்குநேரி அருகே ஓடையில் மூழ்கி கொத்தனார் பலி
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் கோனார் தெருவை சேர்ந்தவர் வேம்பு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்தமகன் ஆழ்வார்(வயது 24) கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். ஆழ்வாருக்கு திருமணம் ஆகவில்லை.
ஆழ்வார் நேற்று மாலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு குளிக்க சென்றுள்ளார். குளித்து கொண்டிருக்கும்போது அவர்களிடையே அங்குள்ள பாலத்தின் உட்பகுதியில் மூழ்கி சென்று அடுத்த பக்கமாக வெளியே வரவேண்டும் என்று போட்டி எழுந்துள்ளது.
உடனே ஆழ்வாரும் பாலத்திற்கு கீழ்பகுதியில் மூழ்கி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பாலத்தின் அடியில் அவர்கள் அனைவரும் மூழ்கி பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஆழ்வார் பாறைகளுக்கு இடையே மாட்டி கொண்டிருப்பதை பார்த்து அவரை உடனடியாக நண்பர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு ஆழ்வாரை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்