என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்
Byமாலை மலர்21 Nov 2019 11:38 AM GMT (Updated: 21 Nov 2019 11:38 AM GMT)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆற்றில் குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தில் நடந்து சென்ற வாலிபர் திடீரென பாலத்தில் இருந்து பவானி ஆற்றில் குதித்தார்.
ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி பலியானார்.
அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கொடுத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர். ஆற்றில் குதித்த வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
பல மணி நேர தேடுதலுக்குப்பிறகு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபர் யார்? என கண்டு பிடித்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் யசோதரன் (31) என தெரிய வந்தது. இவர் எம்.டெக் படித்த பட்டதாரி ஆவார். திருமணம் ஆகவில்லை.
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக பவானி ஆற்றில் யசோதரன் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தில் நடந்து சென்ற வாலிபர் திடீரென பாலத்தில் இருந்து பவானி ஆற்றில் குதித்தார்.
ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி பலியானார்.
அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கொடுத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர். ஆற்றில் குதித்த வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
பல மணி நேர தேடுதலுக்குப்பிறகு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபர் யார்? என கண்டு பிடித்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர் சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் யசோதரன் (31) என தெரிய வந்தது. இவர் எம்.டெக் படித்த பட்டதாரி ஆவார். திருமணம் ஆகவில்லை.
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக பவானி ஆற்றில் யசோதரன் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X