என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய் மாமனை கல்லால் அடித்து கொன்ற ஊழியர் - தாயை திட்டியதால் ஆத்திரம்
Byமாலை மலர்20 Nov 2019 9:56 AM GMT (Updated: 20 Nov 2019 9:56 AM GMT)
பரங்கிமலையில் தாயை திட்டியதால் போதையில் இருந்த தாய் மாமனை கல்லால் அடித்து கொன்ற ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
பரங்கிமலை அருகே ஆலந்தூர் ஆசர்காபா தெருவை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (31). கொரியர் நிறுவன ஊழியர்.
இவரது தாய் சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் என்ற அப்புன் (60). தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வரும் இவர் அடிக்கடி குடி போதையில் கோகுல்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவு வழக்கம் போல் குடிபோதையில் சென்ற எத்திராஜ், சரஸ்வதியை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை ஆத்திரம் அடைந்த கோகுல்ராஜ் கல்லால் எத்திராஜின் முகத்தில் தாக்கினார்.
காயம் அடைந்த எத்திராஜ் தொடர்ந்து திட்டியவாறே அங்கிருந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற கோகுல்ராஜ் மீண்டும் கல்லால் எத்திராஜின் தலை, முகத்தில் சரமாரியாக தாக்கினார்.
இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று கோகுல்ராஜை கைது செய்தனர்.
பரங்கிமலை அருகே ஆலந்தூர் ஆசர்காபா தெருவை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (31). கொரியர் நிறுவன ஊழியர்.
இவரது தாய் சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் என்ற அப்புன் (60). தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வரும் இவர் அடிக்கடி குடி போதையில் கோகுல்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவு வழக்கம் போல் குடிபோதையில் சென்ற எத்திராஜ், சரஸ்வதியை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை ஆத்திரம் அடைந்த கோகுல்ராஜ் கல்லால் எத்திராஜின் முகத்தில் தாக்கினார்.
காயம் அடைந்த எத்திராஜ் தொடர்ந்து திட்டியவாறே அங்கிருந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற கோகுல்ராஜ் மீண்டும் கல்லால் எத்திராஜின் தலை, முகத்தில் சரமாரியாக தாக்கினார்.
இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று கோகுல்ராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X