என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பலி
Byமாலை மலர்19 Nov 2019 4:14 PM GMT (Updated: 19 Nov 2019 4:14 PM GMT)
ஆலங்குடி அருகே அரசு பஸ் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடியை சேர்ந்த குப்புராஜ் மகன் தீபக் (வயது 24). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் தீபக் அவரது நண்பர் கருப்பையா மகன் ஜெயவேல்(25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆலங்குடி சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.
ஆலங்குடி குப்பக்குடி சாலையில் உள்ள தென்னந்தோப்பு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தீபக் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெயவேல் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பஸ் டிரைவர் ஆலங்குடி வெண்ணாவல்குடியை சேர்ந்த ராமச்சந்திரன், ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X