search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை பலி
    X
    குழந்தை பலி

    நாகூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி குழந்தை பலி

    நாகூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகூரை அடுத்த கொத்தரங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராதிகா (29) என்ற மனைவியும், சந்தோஷ் (4), சைலேஷ் (2) என்ற மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் ராதிகா நேற்று வடகுடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார். நேற்று மாலை வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த சைலேஷ் வீட்டில் அருகே உள்ள மாரியம்மன் கோவில் குளத்தில் சென்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உள்ளான். இதை அறியாத ராதிகா குழந்தையை பல இடங்களில் தேடி உள்ளார்.

    அப்போது சைலேஷ் குளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தகவலறிந்த நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×