search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி காவலாளி பலி

    குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பன்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன வெள்ளையன் என்கிற ராமையா(வயது 70).

    இவர் உலிக்கல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை பணியில் இருந்தபோது அங்கு வந்த காட்டெருமை ராமையாவை முட்டி தூக்கி வீசியது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு காட்டெருமையை அங்கிருந்து விரட்டினர். இதுகுறித்து குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் லாலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×