என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காரைக்குடியில் ஜவுளி அதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி-செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் நோன்பு திடல் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோமணி, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். தைவான் நாட்டுக்குச் சென்று விட்டு அவர்கள் நேற்று நள்ளிரவு வீடு திரும்பினர்.
வீட்டின் கதவை திறக்க முயன்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த இளங்கோமணி மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
வீட்டின் 6 அறைகளிலும் பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் கொள்ளை நடைபெற்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து இளங்கோமணி காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருணுக்கு தகவல் கொடுத்தார். அவர் வடக்கு காவல் நிலைய போலீசாருடன் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
வீட்டில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் இளங்கோமணி தெரிவித்தார்.
போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, யாரோ திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளங்கோமணி வீடு மற்றும் ஜவுளிக்கடையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்