search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சித்தோடு அருகே பிரிந்து சென்ற மனைவி வராததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

    சித்தோடு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சித்தோடு:

    சித்தோடு அருகிலுள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகன் என்கிற சவுந்தர் (வயது 31) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை மற்றும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, சவுந்தர் மனைவியை அழைத்தும் வராததால் தகராறில் ஈடுபட்டு தனது வீட்டிற்க்கு வந்துள்ளார்.

    நேற்று காலை வெகு நேரமாகியும் சவுந்தர் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்கையில் வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு சவுந்தர் தற்கொலை செய்துகொண்டு இறந்து ள்ளது தெரியவந்துள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×