என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை
காரைக்குடி:
அண்மைக்காலமாக கடையை விளம்பரப்படுத்து வதற்காக வித்தியாசமான முறையில் வியாபாரிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் திண்டுக்கல்லில் 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. இதை வாங்க காலை முதலே ஏராளமானோர் திரண்டனர்.
இதன் பரபரப்பு அடங்குவதற்குள் 10 பைசாவுக்கு பிரியாணியும், மற்றொரு கடையில் டிசர்ட்டும் வழங்கப்பட்டது. இவ்வாறு தங்கள் கடையை பிரபலப்படுத்த வியாபாரிகள் இதுபோன்ற வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர்.
இதேபோன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பர்மா காலனியில் செயல்படும் மீன்கடை ஒன்றில் இன்று ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து காலை முதலே அப்பகுதியைச் சேர்ந்த அசைவ பிரியர்கள் கடையை முற்றுகையிட்ட னர்.
முதலில் வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் கிடைத்ததால் வாடிக்கையாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியதை பார்க்க முடிந்தது.
முதலில் வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு வழங்கியது ஏன் என்று கடை உரிமையாளர் பாலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல். நான் காரைக்குடியில் இன்று முதல் மீன்கடை தொடங்கியுள்ளேன். மீமிசல் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை அன்றே கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய உள்ளோம். மற்ற கடைகளில் விற்பது போல் பனிக்கட்டியில் வைத்து விற்பனை செய்யமாட்டோம்.
புதிதாக மீன்கடை தொடங்கப்பட்டுள்ளதை காரைக்குடி மக்கள் அறியவும், அவர்களது மனதில் இடம்பிடிக்கவும் அன்று பிடிக்கும் மீன்களை அன்றே விற்பனை செய்கிறோம் என்பதை எடுத்துக்கூறவுமே இன்று எங்கள் கடைக்கு வந்த முதல் 100 பேருக்கு கிலோ 1 ரூபாய்க்கு வழங்கினோம். அதன் பின்னர் வந்தவர்களுக்கு லாபம் இல்லாமல் கொள்முதல் விலையில் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்