என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை மீட்கும் பணியில் மெத்தனமா?- மு.க.ஸ்டாலின் மீது த.மா.கா. பாய்ச்சல்
Byமாலை மலர்31 Oct 2019 12:04 PM GMT (Updated: 31 Oct 2019 12:04 PM GMT)
குழந்தை சுஜித்தை மீட்க எடுக்கப்பட்ட பணி குறித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குறை கூறி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் வில்சன் தவறி விழுந்த செய்தி அறிந்ததும் குழந்தையை மீட்பதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் பலனளிக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கடினமான பாறைகள் இருந்ததால் மீட்புப் பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அவற்றை வல்லுனர் குழு உதவியுடன் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்பு பணியை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குறை கூறி வருகிறார். இது கண்டனத்துக்கு உரியதாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் வில்சன் தவறி விழுந்த செய்தி அறிந்ததும் குழந்தையை மீட்பதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் பலனளிக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கடினமான பாறைகள் இருந்ததால் மீட்புப் பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அவற்றை வல்லுனர் குழு உதவியுடன் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்பு பணியை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குறை கூறி வருகிறார். இது கண்டனத்துக்கு உரியதாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X