என் மலர்
செய்திகள்

பலியான சிறுவன் அர்ஷித்
தோட்டத்தில் உள்ள குட்டையில் விழுந்து 4 வயது சிறுவன் பலி
ஈரோடு அருகே தோட்டத்தில் உள்ள குட்டையில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி வினிதா.
இவர்களுக்கு அர்ஷித் (வயது 24) என்ற மகனும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
விவசாயியான செல்வகுமாரின் தோட்டத்தையொட்டியே வீடும் உள்ளது. வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து மின்மோட்டார் வழியாக தண்ணீர் எடுத்து தோட்டத்துக்கு பாய்ச்சி வந்தார்.
மேலும் வீட்டின் அருகே 2 அடி நீளம் 3 அடி ஆழம் 8 அடி அகலத்தில் ஒரு சிறிய குட்டையும் வெட்டி தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை அந்த குட்டையில் நிரப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் செல்வகுமாரின் 4 வயது சிறுவன் அர்ஷித் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவனை காணவில்லை. வீட்டில் வேலையாக இருந்த குழந்தையின் தான் வினிதா அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் முன்பும் தோட்டத்திலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
வீட்டின் அருகே உள்ள சிறிய குட்டையில் எட்டி பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தார். குட்டையில் மூழ்கியபடி கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு உடனடியாக ஆம்புலன்சு மூலம் தாளவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பிறகு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த பரிதாப சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணப்பாறை நடுகாட்டுபட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த துக்கத்தில் இருந்த திகினாரை கிராம மக்கள் தங்கள் ஊரிலேயே விளையாடி கொண்டிருந்த சிறுவன் குட்டையில் தவறி விழுந்து பலியான சம்பவத்தை அறிந்து கண்ணீர் விட்டு அழுதனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி வினிதா.
இவர்களுக்கு அர்ஷித் (வயது 24) என்ற மகனும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
விவசாயியான செல்வகுமாரின் தோட்டத்தையொட்டியே வீடும் உள்ளது. வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து மின்மோட்டார் வழியாக தண்ணீர் எடுத்து தோட்டத்துக்கு பாய்ச்சி வந்தார்.
மேலும் வீட்டின் அருகே 2 அடி நீளம் 3 அடி ஆழம் 8 அடி அகலத்தில் ஒரு சிறிய குட்டையும் வெட்டி தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை அந்த குட்டையில் நிரப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் செல்வகுமாரின் 4 வயது சிறுவன் அர்ஷித் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவனை காணவில்லை. வீட்டில் வேலையாக இருந்த குழந்தையின் தான் வினிதா அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் முன்பும் தோட்டத்திலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
வீட்டின் அருகே உள்ள சிறிய குட்டையில் எட்டி பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தார். குட்டையில் மூழ்கியபடி கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு உடனடியாக ஆம்புலன்சு மூலம் தாளவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பிறகு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த பரிதாப சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணப்பாறை நடுகாட்டுபட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த துக்கத்தில் இருந்த திகினாரை கிராம மக்கள் தங்கள் ஊரிலேயே விளையாடி கொண்டிருந்த சிறுவன் குட்டையில் தவறி விழுந்து பலியான சம்பவத்தை அறிந்து கண்ணீர் விட்டு அழுதனர்.
Next Story






