search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    மஞ்சூர்:

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் முதல் ஆந்திர கடலோர பகுதிவரை நீடித்து வருகிறது.

    இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் உள்ள பல பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.

    இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். 
    கலெக்டர் இன்னசன்ட் திவ்யா
    நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
    Next Story
    ×