என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் திருடிய வாலிபர் கைது

    சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    வயலூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்த்தவர் முத்து. இவர் சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டார்.

    இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து பேக்கரியில் திருடிய சுங்குவார்சத்திரம் ராஜீவ் காந்தி தெரு சேர்ந்த அமிர்த்சுதீனை கைது செய்தார்.

    Next Story
    ×