என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுக்கோட்டையில் வாலிபர் கொலை- கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன் அடப்பன்வயல் 3-ம்வீதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் வினோத் சக்கரவர்த்தி (வயது 27). நேற்றிரவு இவர் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கும்பல் வந்தது. அவர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வினோத் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.அதற்குள் அந்த கும்பல் அவரை மடக்கி பிடித்து சரமாரி அரிவாளால் வெட்டினர். இதில் வினோத்தின் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வினோத்தை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதில் வினோத்திற்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பழிக்குப்பழியாக கார்த்திக்கேயன் ஆதரவாளர்கள், வினோத்தை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்