search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிக்க முயற்சி
    X
    நகை பறிக்க முயற்சி

    அறந்தாங்கி அருகே மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி

    அறந்தாங்கி அருகே கடையில் இருந்த மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற 3 பேரில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா(வயது 60) . இவர் அப்பகுதியில் பெட்டிகடை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடையில் இருந்த போது அங்கு வந்த 3 பேர் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர். 

    உடனே சரோஜா கூச்சலிட்டதும் அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்த 3 பேரும் தப்பி ஓடினர். பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்ததில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த தமிழன் என்பது தெரியவந்தது. 

    மற்ற இருவர் தப்பினர். பிடிபட்டவனை அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×