search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வேதாரண்யம் அருகே தனியார் பள்ளியில் லேப்டாப்- ரூ.52 ஆயிரம் ரொக்கம் திருட்டு

    வேதாரண்யம் அருகே தனியார் பள்ளியில் லேப்டாப்- ரூ.52 ஆயிரம் ரொக்கம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியை நேற்று இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் நள்ளிரவு பூட்டை உடைத்து பள்ளிக்குள் புகுந்த கொள்ளையன் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.52 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு லேப்-டாப், கம்ப்யூட்டருக்கான உபகரணங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டான்.

    இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் பள்ளி செயலாளர் வேதரெத்தினம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×