என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் லாரியில் மூட்டை மீது அமர்ந்திருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி
வேலூர்:
வேலூர் சங்கரன்பாளையம் துரைசிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 59) சுமை தூக்கும் தொழிலாளி.
இன்று காலை நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து லாரியில் மூட்டைகளை ஏற்றி கொண்டு சத்துவாச்சாரி நோக்கி புறப்பட்டு சென்றனர். லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் மீது சுப்பிரமணி அமர்ந்திருந்தார்.
காட்பாடி சாலையில் நேஷனல் தியேட்டர் சிக்னல் அருகே சென்ற போது மூட்டை மீது அமர்ந்திருந்த சுப்பிரமணி திடீரென தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைக் கண்டு வாகன ஓட்டிகள் திடுக்கிட்டனர். நடுரோட்டில் இந்த விபத்து நடந்ததால் காட்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணி உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்