என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடியில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் ஆசிட் குடித்து பலி
Byமாலை மலர்5 Oct 2019 11:25 AM GMT (Updated: 5 Oct 2019 11:25 AM GMT)
காட்பாடியில் கணவர் இறந்த ஒரு வாரத்தில் துக்கம் தாங்காமல் இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
காட்பாடி கல்புதூர் திருவேங்கட முதலியார் தெருவைசேர்ந்தவர் சீனிவாசன். தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி திவ்யா (வயது 25) தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
கடந்த வாரம் சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் திவ்யா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.
இதனால் துடிதுடித்த அவர் வீட்டிலேயே இறந்தார். இதனைகண்டு திடுக்கிட்ட அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காட்பாடி கல்புதூர் திருவேங்கட முதலியார் தெருவைசேர்ந்தவர் சீனிவாசன். தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி திவ்யா (வயது 25) தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
கடந்த வாரம் சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் திவ்யா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.
இதனால் துடிதுடித்த அவர் வீட்டிலேயே இறந்தார். இதனைகண்டு திடுக்கிட்ட அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X