என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 6 பேர் ஜெயிலில் அடைப்பு
Byமாலை மலர்5 Oct 2019 11:21 AM GMT (Updated: 5 Oct 2019 11:21 AM GMT)
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மணல் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று இரவு மேல்மொணவூர் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர்.
அதனை ஒட்டி வந்த மேல்மொணவூரைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 28), மோகன் (28), சத்யன் (25), கார்த்தி (38) ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நாகராஜன் (42) என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்தனர்.
உமராபாத் அடுத்த பழைய மின்னூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த குணசேகரன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் 2 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மணல் கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று இரவு மேல்மொணவூர் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர்.
அதனை ஒட்டி வந்த மேல்மொணவூரைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 28), மோகன் (28), சத்யன் (25), கார்த்தி (38) ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நாகராஜன் (42) என்பவரை வாலாஜா போலீசார் கைது செய்தனர்.
உமராபாத் அடுத்த பழைய மின்னூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த குணசேகரன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் 2 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X