search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேதாரண்யத்தில் லாரி மோதி முதியவர் பலி

    வேதாரண்யத்தில் மோட்டார் கைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியன் பள்ளி குமரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு (வயது70). இவர் அதே பகுதியில் பிள்ளையார் கோவில் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார்.

    இவர் நேற்று தனது பேரன் விக்னேஷ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் பழனிவேலு பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி பழனிவேலு இறந்தார். அவரது மகன் சத்தியமூர்த்தி(39) கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×