என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்27 Sep 2019 9:41 AM GMT (Updated: 27 Sep 2019 9:41 AM GMT)
ஈரோடு மாவட்டம் கோபி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி மேட்டுவளவு சுப்பணன் வீதியை சேர்ந்தவர் பச்சியப்பன்(48). தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி (44). பாப்பாத்தி அவரது கணவருடன் குடும்ப பிரச்சனை தொடர்பாக கோபித்து கொண்டு கோபி மாதேஸ்வரன் கோயில் வீதியில் உள்ள அவரது அண்ணன் முத்துச்சாமி வீட்டிற்கு சென்றார். பின்னர் சமாதானம் அடைந்து, அவரது வீட்டிற்கு சென்றார்.
இருப்பினும் மனவேதனையில் இருந்த பாப்பாத்தி, சம்பவத்தன்று இரவு வீட்டின் அறையை உட்புறமாக தாழிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாத்தியின் அண்ணன் முத்துச்சாமி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X