என் மலர்
செய்திகள்

கைது
டி.என்.பாளையம் அருகே கள்ள துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது
டி.என்.பாளையம் அருகே வேட்டையாட பயன்படுத்தப்படும் கள்ள துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஎன்.பாளையம்:
டிஎன்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் வேட்டை சாமி கோவில் தோட்டம் என்ற இடத்தில் வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை ஒருவர் வைத்திருப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாபுதூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த வேட்டையன்(வயது 60) என்பவரை பிடித்து விசாரித்ததில், அரசு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டு பன்றியை வேட்டையாட பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேட்டையன் என்பவர் மீது பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
டிஎன்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் வேட்டை சாமி கோவில் தோட்டம் என்ற இடத்தில் வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை ஒருவர் வைத்திருப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாபுதூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த வேட்டையன்(வயது 60) என்பவரை பிடித்து விசாரித்ததில், அரசு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டு பன்றியை வேட்டையாட பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேட்டையன் என்பவர் மீது பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Next Story






