என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுந்தப்பாடி அருகே வீட்டு கதவை உடைத்து பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்23 Sep 2019 11:27 AM GMT (Updated: 23 Sep 2019 11:27 AM GMT)
கவுந்தப்பாடி அருகே வீட்டு கதவை உடைத்து பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் மூலத் தோட்டத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரன் (வயது 37).
பெருந்துறை சிப் காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் ‘‘பிட்டராக’’ பணி புரிகிறார். மனைவி பெயர் ரங்கநாயகி. ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு அனைவரும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் 3 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் வீட்டு கதவை இரும்பு ராடால் உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ஹாலில் படுத்திருந்த ராமேஸ்வரன் மனைவி ரங்கநாயகி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை (தாலி செயினை) பறித்தனர்.
இதை கண்டு திடுக்கிட்ட அவர் சத்தம் போட்டார். அவரது கணவர் முழித்து அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் 3 பேரும் 5 பவுன் நகையுடன் இருளில் தப்பி ஓடி மறைந்து விட்டனர்.
இதே போல் சலங்கபாளையம் டேங்க் ரோடு 3-வது வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் கோபி பச்சை மலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 25 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் மூலத் தோட்டத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரன் (வயது 37).
பெருந்துறை சிப் காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் ‘‘பிட்டராக’’ பணி புரிகிறார். மனைவி பெயர் ரங்கநாயகி. ஒரு பெண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு அனைவரும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் 3 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் வீட்டு கதவை இரும்பு ராடால் உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ஹாலில் படுத்திருந்த ராமேஸ்வரன் மனைவி ரங்கநாயகி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை (தாலி செயினை) பறித்தனர்.
இதை கண்டு திடுக்கிட்ட அவர் சத்தம் போட்டார். அவரது கணவர் முழித்து அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் 3 பேரும் 5 பவுன் நகையுடன் இருளில் தப்பி ஓடி மறைந்து விட்டனர்.
இதே போல் சலங்கபாளையம் டேங்க் ரோடு 3-வது வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் கோபி பச்சை மலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 25 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X