search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் கைப்பற்றிய குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.
    X
    போலீசார் கைப்பற்றிய குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.

    சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல்

    சிதம்பரம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பொன்னாங்கன்னி மேடு குறுக்கு ரோட்டில் பகுதியில் உள்ள குடோனில் குட்கா, பான்பராக், கூல் லிப்,ஆர்.எம்.டி.,ஹன் பதுக்கி விற்பனை செய்வதாக சிதம்பரம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் முருகன்,ராஜா, தாலுகா நாகராஜன்மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடோனில் சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    பின்னர் அங்கு வெவ்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் நைலான் மற்றும்கோணி சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டியில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். 

    குடோனில் மறைத்து போதை பொருட்கள் வைத்திருந்தாக சிதம்பரம் மாலைகட்டி தெருவை சேர்ந்த நைனாராம்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×