என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டுக்கு நாளை உதயநிதி ஸ்டாலின் வருகை
Byமாலை மலர்20 Sep 2019 11:04 AM GMT (Updated: 20 Sep 2019 11:04 AM GMT)
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஈரோட்டிற்கு வருகை புரிகிறார். இளைஞர் அணியின் உறுப்பினர் முகாமை அவர் தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு:
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை (சனிக்கிழமை) காலை8.30 மணி அளவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவகத்தை பார்வையிடுகிறார்.
பிறகு 9.30 மணி அளவில் காளைமாடு சிலை அருகில் உள்ள சிமினி ஹோட்டல் அருகில் இளைஞர் அணியின் உறுப்பினர் முகாமை தொடங்கி வைக்கிறார்.
காலை 10.30 மணி அளவில் ஈரோடு கோல்டன் சிட்டி லயன்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் மூலமாக மொடக்குறிச்சி தொகுதி,கொடுமுடி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் குளம் தூர்வாரி முடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். பிறகு 12.30 மணி அளவில் ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பிறகு 2 மணி அளவில் கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
நிகழ்ச்சியில் இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ . ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதுசமயம் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட , மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி, ஊராட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் சார்பு அணியினர் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை (சனிக்கிழமை) காலை8.30 மணி அளவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவகத்தை பார்வையிடுகிறார்.
பிறகு 9.30 மணி அளவில் காளைமாடு சிலை அருகில் உள்ள சிமினி ஹோட்டல் அருகில் இளைஞர் அணியின் உறுப்பினர் முகாமை தொடங்கி வைக்கிறார்.
காலை 10.30 மணி அளவில் ஈரோடு கோல்டன் சிட்டி லயன்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் மூலமாக மொடக்குறிச்சி தொகுதி,கொடுமுடி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் குளம் தூர்வாரி முடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். பிறகு 12.30 மணி அளவில் ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பிறகு 2 மணி அளவில் கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
நிகழ்ச்சியில் இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ . ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதுசமயம் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட , மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி, ஊராட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் சார்பு அணியினர் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X