search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன் (கோப்புப்படம்)
    X
    அமைச்சர் செங்கோட்டையன் (கோப்புப்படம்)

    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம்- அமைச்சர் செங்கோட்டையன்

    2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    நம்பியூர்:

    அத்திக்கடவு- அவினாசி திட்ட 5-வது நீரேற்று நிலையம் வரப்பாளையத்தில் அமைய உள்ளது. அதற்கான பூமி பூஜை நம்பியூரில் இன்று மதியம் நடந்தது.

    இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு இந்த பணிக்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அரசு விவசாயிகள் பக்கம் எப்போதும் இருக்கும். இன்று இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

    2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.

    அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×