search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பீளமேடு அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை பீளமேடு அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை பீளமேடு தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள தண்டவாள பகுதியில் 25 வயது மிக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.

    திடீரென அவர் அந்த வழியாக கோவை நோக்கி வந்து ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அவர் கோவை காளப்பட்டியை சேர்ந்த டிரைவர் சுகுமார் என்பவரின் மகன் சஞ்சய்குமார்(வயது 20). இவர் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.

    தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×