என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம் சீரமைப்பு
Byமாலை மலர்19 Sep 2019 8:49 AM GMT (Updated: 19 Sep 2019 8:49 AM GMT)
பிரதமர் மோடியும், சீன அதிபரும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதையடுத்து, திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
மாமல்லபுரம்:
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிஜின்பிங்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தலைவர்கள் பார்வையிடும் இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். சீன அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் வந்து இடங்களை விரைவில் பார்வையிட உள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் ஏற்கனவே ராணுவ கண்காட்சியின்போது அமைக்கப்பட்ட ஹெலிபேடு தளத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் ராணுவ ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளனர்.
இதற்காக மீண்டும் அந்த ஹெலிபேடை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. தலைவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு காரில் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை முதற்கட்டமாக நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க தொடங்கி விட்டனர்.
ஹெலிபேடு எதிரே இருந்த சாலை தடுப்பு சுவர்கள் 20 மீட்டர் தூரத்திற்கு இடிக்கப்பட்டு பாதுகாப்புபடை அதிகாரிகளின் கார்கள் வேகமாக வந்து திரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகிறார்கள்.
ஹெலிபேடு சீரமைப்பு பணிகள் முடிந்ததும் இரு நாட்டு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளும் வான்வழி வெள்ளோட்டம் பார்க்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிஜின்பிங்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தலைவர்கள் பார்வையிடும் இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். சீன அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் வந்து இடங்களை விரைவில் பார்வையிட உள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் ஏற்கனவே ராணுவ கண்காட்சியின்போது அமைக்கப்பட்ட ஹெலிபேடு தளத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் ராணுவ ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளனர்.
இதற்காக மீண்டும் அந்த ஹெலிபேடை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. தலைவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு காரில் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை முதற்கட்டமாக நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க தொடங்கி விட்டனர்.
ஹெலிபேடு எதிரே இருந்த சாலை தடுப்பு சுவர்கள் 20 மீட்டர் தூரத்திற்கு இடிக்கப்பட்டு பாதுகாப்புபடை அதிகாரிகளின் கார்கள் வேகமாக வந்து திரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகிறார்கள்.
ஹெலிபேடு சீரமைப்பு பணிகள் முடிந்ததும் இரு நாட்டு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளும் வான்வழி வெள்ளோட்டம் பார்க்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X