என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா?- கண்டித்து வி.சிறுத்தைகள் பிரசாரம்
ஈரோடு:
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிபுணர்வு பிரச்சாரம் பவானி நகரம் ஒன்றிய பகுதி மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது.
பிரச்சார பயணத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக 5, 8 -ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு வந்தால் ஏழை குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என பிரச்சாரத்தில், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அமுதன் துரையரசன், கோவை மாணிக்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.
இந்நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய செயலாளர் பால்ராஜ் . பேரூர் செயலாளர் வேலு, அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் .சண்முகம், துணைச் செயலாளர் கே.கே.மூர்த்தி, வணிகர் அணி அமைப்பாளர் சக்தி வேந்தன், .மாநில துணைச்செயலாளர் குருநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்