என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் எரிசாராயம் பதுக்கல் - உரிமையாளர் கைது

    காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் எரிசாராயம் பதுக்கிய உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    மாகறல் அடுத்த மேல் பேரமநல்லூர் கிராமம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.

    இந்த பண்ணையில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மண்டல சி.ஐ.யு.க்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் 35 லிட்டர்கொள்ளளவு கொண்ட 425 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தை அடுத்த அஞ்பாக்கம் அருகே காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த வேன் டிரைவரின் கட் டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதனை கண்ட அவ்வழியாக வந்தவர்கள் அங்கு திண்டனர். உடனே மினி வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாகனத்தை பொது மக்கள் சோதனையிட்டபோது அதில் எரிசாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து மாகறல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வேனை சோதனை செய்ததில் 35 லிட்டர் அளவு கொண்ட 25-க்கும் மேற்பட்ட கேன்களில் இருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவர் மற்றும் வேன் உரிமையாளரை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் 150 கேனில் எரிசாராயம் கடத்திய லாரி சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து பொது மக்கள் கூறும்போது, ‘இப்பகுதிகளில் சோதனைசாவடிகள் ஏதும் இல்லாததால் எரிசாராயம் கடத்தல் எளிதாக நடை பெறுகிறது. எனவே போலீசார் சோதனை சாவடி அமைத்து இதனை தடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×