என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
40 வயதாகியும் திருமணம் ஆகவில்லை- விரக்தியில் தற்கொலை செய்த நபர்
Byமாலை மலர்16 Sep 2019 10:12 AM GMT (Updated: 16 Sep 2019 10:13 AM GMT)
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே 40 வயதாகியும் திருமணம் ஆகாததால் விரக்தியடைந்த நபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொடுமுடி:
கொடுமுடி அருகில் கொளாநல்லிகிராமம் பெரிய செம்மான்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 40) இவருக்கு பலமுறை திருமண ஏற்பாடு செய்தும் திருமண தடை ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த பத்மநாபன் கடந்த மாதம் 25-ந் தேதி மதியம் 11.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது தோட்டத்திற்கு அடிப்பதற்காக வாங்கி வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை எடுத்து குடித்து விட்டார்.
பின்னர் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்த அவரை அவரது சகோதரி மீனாட்சி பார்த்து விசாரித்த போது விஷ மருந்தினை குடித்துவிட்டதை அறிந்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பத்மநாபன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X