search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மொடக்குறிச்சி அருகே மூதாட்டி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை பறிப்பு

    மொடக்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
    ஈரோடு

    மொடக்குறிச்சி அடுத்த பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி . இவரது மனைவி சாமியத்தாள் (வயது60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். பெரியசாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சாமியத்தாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 6.15 மணி அளவில் சாமியத்தாள் துணி துவைப்பதற்காக வீட்டின் குளியல் அறைக்கு சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் திடீரென வாட்டசாட்டமான வாலிபர் ஒருவன் புகுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாமியத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்று ஓடினான். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் சாமியாத்தாள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்.. திருடன் என கத்தினார்.

    ஆனால் அதற்குள் அந்த நபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பிவிட்டான். மர்ம நபர் நகையை கழுத்தில் இருந்து பறித்த போது காளியாத்தாளுக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் மூதாட்டியிடம் நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×