என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
Byமாலை மலர்8 Sep 2019 2:38 PM GMT (Updated: 8 Sep 2019 2:38 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் பல்லத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தே.மங்களம் கிராமத்தில் துரைராஜ் என்பவரது வீட்டு திருமணத்திற்காக இன்று காலை கழுவன் தோண்டி கிராமத்தில் இருந்து 15 பேர் ஒரு வேனில் புறப்பட்டனர்.
வேன் கிலால் கிராமத்தை தாண்டி செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை ஒருபுறமாக திருப்பினார். இதனால் தாறுமாறாக ஓடிய வேன் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து த.பழுர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X