என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதி
Byமாலை மலர்7 Sep 2019 10:00 AM GMT
மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை:
மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா வரையும் தினமும் ரெயில்கள் சென்று திரும்புகின்றன. இதில் மிக முக்கிய புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரம் ரெயில் நிலையம், பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் கொண்டு வந்த விருதுநகர்-மானாமதுரை ரெயில்பாதை என அனைத்தும் மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தற்போது காரைக்குடி-திருவாரூர் ரெயில் பாதையிலும் எவ்வித ரெயில்களும் விடப்படாமல் பணிகள் முடிந்தும் பயனின்றி உள்ளது.
தற்போது ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்ல நள்ளிரவு ஆகி விடுகிறது. இதில் வரும் பயணிகளுக்கு உணவு கிடைக்க கேட்டரிங் வசதி இல்லாததால் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதேபால் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும், மானாமதுரை வழியாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில்களில் கேட்டரிங் இல்லாததால் முதியோர்கள், நோயாளிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ரெயில் நிலைய பிளாட்பார கடைகளில் சென்று வாங்க வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் மட்டும் நிற்கிறது. உணவு வாங்க இறங்கிய பலர் ரெயில்களில் மீண்டும் ஏற முடியாமல் நடுவழியில் பயணத்தை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கேட்டரிங் விரும்பிய உணவு ஆர்டர் எடுப்பவர்கள் விருதுநகர், மதுரை, மானாமதுரை ரெயில் நிலையங்களில் ரெயிலில் சப்ளை செய்ய முடியும். தற்போது அந்த வசதி இல்லாததால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை ரெயில்வே கோட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா வரையும் தினமும் ரெயில்கள் சென்று திரும்புகின்றன. இதில் மிக முக்கிய புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரம் ரெயில் நிலையம், பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் கொண்டு வந்த விருதுநகர்-மானாமதுரை ரெயில்பாதை என அனைத்தும் மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. தற்போது காரைக்குடி-திருவாரூர் ரெயில் பாதையிலும் எவ்வித ரெயில்களும் விடப்படாமல் பணிகள் முடிந்தும் பயனின்றி உள்ளது.
தற்போது ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்ல நள்ளிரவு ஆகி விடுகிறது. இதில் வரும் பயணிகளுக்கு உணவு கிடைக்க கேட்டரிங் வசதி இல்லாததால் உணவு கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதேபால் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு மதுரை வழியாகவும், மானாமதுரை வழியாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில்களில் கேட்டரிங் இல்லாததால் முதியோர்கள், நோயாளிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ரெயில் நிலைய பிளாட்பார கடைகளில் சென்று வாங்க வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் மட்டும் நிற்கிறது. உணவு வாங்க இறங்கிய பலர் ரெயில்களில் மீண்டும் ஏற முடியாமல் நடுவழியில் பயணத்தை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கேட்டரிங் விரும்பிய உணவு ஆர்டர் எடுப்பவர்கள் விருதுநகர், மதுரை, மானாமதுரை ரெயில் நிலையங்களில் ரெயிலில் சப்ளை செய்ய முடியும். தற்போது அந்த வசதி இல்லாததால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் இரவு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயில்களில் விரும்பிய உணவு கிடைக்க மதுரை ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X