என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
வேலூர்:
வேலூர் மாவட்டம் அரக்கோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கனி (வயது 54). இவருக்கும் அரக்கோணத்தில் அரசியல் கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் கனி அரக்கோணத்தில் இருந்து வேலூர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரோடு அரக்கோணம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய போலீசாரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் இன்ஸ்பெக்டர் கனி மிகவும் விரக்தி அடைந்தார்.
இது பற்றி சக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுமுறை கேட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மருத்துவ விடுப்பில் சென்ற அவர் வேலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்தார்.
மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியிட மாற்றத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்