search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
    X
    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- வி.சிறுத்தைகள் ஆவேசம்

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்தும் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் சண்முகம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயபாலன், கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் அரங்கம் முதல்வன் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் மதிவாணன் மாவட்ட துணை செயலாளர் அக்பர் அலி, ஜாபர்அலி , பெருந்துறை சட்டமன்ற தொகுதி துனை செயலாளர் இளஞ்சுடர் ஓவியர் அணி மாநிலத் துணைச் செயலாளர் பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வணிக அணி மாவட்ட அமைப்பாளர் சக்தி வேந்தன், நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச்செயலாளர் குருநாதன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஷாம், டாஸ்மாக் மாரிமுத்து, பவானி ஒன்றிய செயலாளர் பவுல்ராஜ், மொடக்குறிச்சி தொகுதி துனை செயலாளர் கமல் நாதன், ஆவண காப்பக மாவட்ட அமைப்பாளர் நக்கீரன் பால்ராஜ் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு பிரிவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

    Next Story
    ×